கலைஞர் மகளிர் உரிமை தொகை வாயிலாக தமிழ்நாட்டில் 1 கோடியே 15 லட்சம் மகளிர் பயன்பெறுகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில் 4.82 லட்சம் மாணவிகள் பயன் பெறுகின்றனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதுபோல் பல்வேறு திட்டங்களில் ஏராளமானோர் பயன்பெறுகின்றனர்.
தாம்பரம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மாடம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள், மாடம்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களும் புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால்வாய்கள், நவீன தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. மாடம்பாக்கம் பெரிய ஏரி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறவுள்ளது.
இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வேட்பாளர் டி.ஆர்.பாலுவை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான மாடம்பாக்கம் நடராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.