விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி: குவியும் பிரபலங்கள்; தொண்டர்கள்..தீவுத்திடலில் போக்குவரத்து மாற்றம்!!

சென்னை :மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. பகல் 1 மணிக்கு பிறகு விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்தின் உடலை காண ஏராளமான தொண்டர்கள் தீவுத்திடல் பகுதியில் குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள் வழியே செல்வதை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் அறிவுறுத்தி உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் பின்வருமாறு…

*அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம், கொடி ஊழியர்கள் சாலை வழியாக அண்ணாசாலைக்கு தீவு மைதானத்தின் இடது நுழைவு வழியாக நுழைய அனுமதிக்கப்படும்.

*மற்ற மூத்த கலைஞர்கள் பல்லவன் முனை மற்றும் வாலாஜா முனை (அண்ணா சாலை, கொடிப் பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.

*தீவுத்திடல் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்தின் அளவு ஓரளவு அதிகமாக இருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

*சென்னை காமராஜர் சாலையில் இருந்தும் மன்றோ சிலை மற்றும் சென்ட்ரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல வேண்டாம்.

*வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கட்சிக் கேடர் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மேக்சி கேப்கள்) அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை வரை மட்டுமே அனுமதிக்கப்படும்,

*அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படும்.

*விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தப்படுவதால் தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

*தீவுத் திடல், ஈ.வி.ஆர்.சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியிலிருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலையில் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்