இருந்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து நேற்று காலை கொருக்குப்பேட்டை – கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பாலமுருகன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவறிந்த ஆர்கே நகர் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘பாலமுருகன் தீபாவளி பண்டு, ஏலச் சீட்டு நடத்தி ₹13 கோடிக்கு மேல் ஏமாற்றியுள்ளார். அவர் மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.