அதன்படி, சிறுபான்மையினர் நல இயக்குநர் 22 மாவட்ட தலையிடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசாங்க நிலங்களில் கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறை தோட்டங்கள் இல்லை என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடம் இருந்து அறிக்கை பெற்றிருந்தார்.
அதன்படி, இந்த மாவட்டங்களில் முதல்வர் அறிவித்தது போல், மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பில் கல்லறை தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைக்க தகுதியான அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் அது கிடைக்க பெறாத பட்சத்தில் தனியார் நிலங்களை கையகப்படுத்தி ரூ.10 கோடி செலவில் அமைத்திட ஒப்புதல் வழங்கிடுமாறு சிறுபான்மையினர் நல இயக்குநர் கேட்டு கொண்டதன் அடிப்படையிலும், முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாகவும் இந்த கருத்துருவினை அரசு நன்கு கவனமுடன் பரிசீலனை செய்து ஒப்புதல் அளித்து உத்தரவை பிறப்பிக்கிறது.