அவ்வப்போது பொறுப்பு அமைச்சர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிடுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக செயல்பட்டுவந்த சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மாற்றப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மெய்யனாதனை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக ரகுபதி நியமனம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.