சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்று புகழ் ஈட்டி தந்தவர்களே அநீதிகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட வேண்டிய அவல நிலையுள்ளது பாஜ ஆளும் ஆட்சியில். சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவைச் சார்ந்த இவர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி நாட்டுக்காகப் போராடி பதக்கங்களை வென்றவர்கள். இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சர்வதேச போட்டிகளில் பங்குபெற இயலாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தேசப்பற்றை போதிக்கின்ற பாஜ மதவாத சக்திகள் அதற்கு முரணாக செயல்படுகின்றன.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்ட நியாயங்களை மற்ற மாநில முதல்வர்களுக்கும் எடுத்துக் கூறி தேசிய அளவில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு தமிழனும் இந்தியனும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.