அவர்களை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சங்கர், சுரேஷ் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து தரணிவேல், ராஜமூர்த்தி, மண்ணாங்கட்டி ஆகியோர் இறந்தனர். அதே பகுதியை சேர்ந்த 13 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மலர்விழி, விஜயன், சங்கர், சரத்குமார், கேசவவேலு, ஆபிரகாம், விஜயன், ராஜவேல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில், இன்று காலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் என்பவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.