பீஞ்சமந்தை மலையில் இருந்து ஜார்த்தான்கொல்லை வரை 6 கிலோ மீட்டர் தூரம் காரிலும், அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பைக்கிலும் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடிவாரம் வரை கலெக்டர், எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் நடந்தபடியே கீழே இறங்கி வந்து மலை வழி பாதையை ஆய்வு செய்தனர். அப்போது, விறகுகளை தலையில் சுமந்து வந்த மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தனர். விரைவில் சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார். பின்னர் ஜார்த்தான்கொல்லையில் உள்ள விவசாய நிலத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாடுகளை பூட்டி சிறிது நேரம் ஏர் ஓட்டினார். கலெக்டர் மாடுகளை பூட்டி ஏர் உழுத வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.