இதையடுத்து சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நான் குடியிருக்கும் வீட்டில் எந்த பிரச்னையும் செய்யக்கூடாது என்ற தடை உத்தரவை கடந்த 12ம்தேதி பெற்றேன். ஆனால், அதன்பின்னர் வதனி சில வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு, தண்டையார் பேட்டை போலீசாரின் உதவியுடன் என் வீட்டை கைப்பற்றிக் கொண்டார் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வீட்டை கையகப்படுத்தும் போது அங்கு இருந்த வழக்கறிஞர்கள், போலீசார் புகைப்படத்தை மனுதாரரின் வழக்கறிஞர் விஜயேந்திரன் தாக்கல் செய்தார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது. வக்கீல்கள், இதுபோன்று தங்களது கட்சிக்காரர்களுடன் சென்று சொத்துக்களை கையகப்படுத்தும் வேலையை செய்யக்கூடாது. இவ்வாறு செய்வதால் ஒட்டுமொத்த வக்கீல் தொழிலையும் அசிங்கப்படுத்துவதாகும். இந்த விஷயத்தில், இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியதுள்ளது. எனவே, தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் இன்று பிற்பகலில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.