இந்தியா கூட்டணி அரசு அமைந்தால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும். திமுகவின் சமூகநீதி கொள்கைகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய தொழிற்சாலையை மிரட்டி குஜராத்திற்கு மாற்றியது பாஜக. பாஜக போன்ற கலவர கட்சிகளை உள்ளே விட்டால் தொழில்துறை நலிவடைந்துவிடும்; பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என இரண்டு தாக்குதல்கள் நடந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளின் சுருக்கு பையில் இருந்த பணம் கூட பறிக்கப்பட்டது . பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்ற 2 தாக்குதல்களால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.