அவருக்கு பின்னடைவு வரும் பொழுது எல்லாம் உறுதி உடன் இருந்தார். சோதனை வரும் பொழுது எல்லாம் அதை ஏற்றுக்கொண்டு அதைனை வெற்றி பெறுவதற்கு அவர் போராடினார். அதற்காக ஒரு இயக்கத்தை உருவாகினார் அந்த இயக்கம் அவருக்கு உறுதுணையாக உள்ளது. தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் அவருக்கும் அந்த சிறப்பு உண்டு. மாநில முதலமைச்சர் என்ற முறையில் ஒன்றிய அரசு உடன் அவர் தோழமை போடுகிறார், அதே நேரத்தில் தன் கொள்கைகளை உறுதிப்படுத்தும் வகையில் சட்டமன்றதில் உறுதியாக இருக்கிறார்.
மோடியால் கொண்டு வந்த 3 திட்டங்களை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அது ஒரு பேராண்மை உள்ள அரசியல் தலைவரால் மட்டுமே முடியும். அரசாங்கத்தை நடந்த வேண்டும் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும், அதற்கு எல்லாருடைய உதவியும் தேவைப்படுகிறது. அதற்கு முதல்வர் வளைந்து கொடுக்க வேண்டும் அவசியம் ஏற்படுகிறது, அந்த நேரத்தில் அவர் வலைந்து கொடுக்கிறார் ஆனாலும் முறிந்து போவதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.