சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், ஆவடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், த/பெ. ஆனந்தன் (27) மற்றும் அவரது மனைவி பவித்ரா (வயது 24) ஆகியோர் எடப்பாடி வட்டம், பூலாம்பட்டி கிராமம், மொளப்பாறை என்ற இடத்தில் காவிரி ஆற்றில் 4-6-2023 அன்று மாலை குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளக்கோவில் கிராமம், மஜரா செம்மாண்டம்பாளையத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான குவாரியில் பணிபுரிந்து வந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (எ) ஜானகிராமன், த/பெ. காமராஜ் (வயது 37) என்பவர் 3-6-2023 அன்று எதிர்பாராதவிதமாக குவாரியில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்