இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல முறை மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்களுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் ஒரே நேரத்தில் தங்களின் பூர்விகமாக அனுபவித்து வந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்று ஆக்கிரமித்து வைத்திருந்த தேயிலை தோட்டத்தில் பசுந்தேயிலையினை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தனியார் நிறுவனத்திற்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர். இதன் காரணமாக பெட்டட்டி சுங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.