சிஎம்டிஏ எல்லைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான அனகாபுத்தூர், ஆவடி (மாநகராட்சி), பல்லாவரம், பம்மல், பூந்தமல்லி, செம்பாக்கம், தாம்பரம் (மாநகராட்சி), திருவேற்காடு ஆகிய 8 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள் மற்றும் 10 ஒன்றிய அலுவலகங்களில் மனைப் பிரிவு அனுமதி, மனை உட்பிரிவு அனுமதி, நிலம் மறுவகைப்பாடு மாற்றம், குடியிருப்பு மற்றும் வணிக கட்டிட திட்ட அனுமதி போன்றவற்றின் அனுமதிக்கான விண்ணப்பம், சிஎம்டிஏ நிர்வாக சீர்கேட்டால் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.
மேற்கண்ட பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆசியுடன் வீட்டுமனை அப்ரூவல் மற்றும் வணிக வளாக கட்டுமானத்துக்கான போலி அனுமதி கடிதங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை பெறும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இவற்றை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.