அப்போது பாமகவைச் சேர்ந்த நிர்வாகி ராஜாராம் பேசும்போது, 2026ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும். அன்புமணி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பால் கனகராஜ் பேசுகையில், நமது கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர வேண்டும்.
2026ல் பாஜ ஆட்சி அமைந்து அண்ணாமலை முதல்வராக வேண்டும். மறைமுகமாக நமக்கு உதவி செய்ய ஏராளமான நபர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்’ என்றார். பாஜ அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜவும், பாமகவும் மாறி மாறி பேசிய இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.