சென்னை: ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி, ‘தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள். கிழக்கிந்தியப் படைகளைத் தன் மதிநுட்பத்தால் வீழ்த்தி, பிறந்த மண்ணின் மானம் காத்த படைத்தளபதி ஒண்டிவீரன் தமிழ்நிலத்தின் போர்க்குணத்திற்குத் தலை சிறந்த சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.