இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 400 ஆண்டுளுக்கு இந்த கோயிலில் பிரம்மோற்சவம் எதுவும் நடத்தப்படவில்லை. இதுவரை இல்லாத நடைமுறையை புதிதாக செயல்படுத்துகின்றனர். நடராஜர்தான் இந்த கோயிலின் பிரதான தெய்வம் என்பதால் கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த முடியாது என்று வாதிடப்பட்டது. அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், பக்தர்கள் விருப்பம் காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப்படுவதாக கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த இந்த வழக்கை, கோயில்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வுக்கு மாற்றிய தலைமை நீதிபதி அமர்வு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளது.