பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் கனமழை பெய்தாலும் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்கவில்லை; தேங்கினாலும் ஒரு மணி நேரத்தில் நீர் அகற்றப்படும். கடந்த 2 நாட்களில் 11 செ.மீ மழை பதிவாகி இருந்தாலும் கூட தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.
20 செ.மீ. மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் மழைநீர் வடியும் நிலையில் நடவடிக்கை. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98% அளவுக்கு நிறைவடைந்துள்ளன. மழைநீர் தேங்கினாலும் அதை உடனே அகற்றுவதற்கான 503 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் குடிநீர் பிரச்சனை இருக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் உள்ள 16 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை எனவும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.