சென்னை யானைகவுனியில் லால் என்பவரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கவர்லால் கம்பெனி என்ற மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் லால் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருவது சம்மந்தப்பட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லால் வீடு, அலுவலகங்களில் வருமானவரி துறையினர் 3 மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தியிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.