சென்னையில் திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த சிறைச்சந்தைக்கு வரவேற்பு: 12 மத்திய சிறைகளில் தயாராகும் 57 வகை பொருட்கள் விற்பனை

சென்னை: சென்னையில் திறக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சிறைச்சந்தை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 12 மத்திய சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் 57 வகையான பொருட்கள் சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் இயங்கும் சிறை சந்தை விற்பனை நிலையம் மூலமாக விற்கப்படுகிறது.

இதில் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வெளிச்சந்தையை விட மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 40 விழுக்காடு சிறைபணியாளர்கள் மற்றும் சிறை கைதிகளின் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தபடுகிறது. இந்த சிறை சந்தையானது. வாரத்தில் திங்கள் முதல் சனி வரை காலை 10 மணி முதல் மாலை ஏழு மணி வரை செயல்படுகிறது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு