இந்த கூட்டத்தில், தென்னிந்திய அளவில் திருச்சியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்ததைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாகிதா பர்வின், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.