நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, தீ பரவும்போது எவ்வாறு பாதுகாப்பாக இருந்து தீயை அணைக்க வேண்டும், எந்த பொருட்கள் கொண்டு தீயை அணைத்தால் தீயை உடனே கட்டுப்படுத்த முடியும், பருவ மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சிக்கி இருக்கும் நபர்களை எவ்வாறு மீட்பது, விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பு என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.இதில், நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.