அதிமுக எம்.எல்.ஏ., நடிகர் மீது வழக்கு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து, நடிகர் சிங்கமுத்து நேற்று முன் தினம் ஆரல்வாய்மொழி காந்தி நகர் பகுதியில் பிரசாரம் செய்தார். இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்றனர். சுமார் 300 பேர் வரை கூடி இருந்தனர்.

தேர்தல் விதிமுறை மீறி முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடந்ததாக, தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராஜசேகர், ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நடிகர் சிங்கமுத்து உள்பட சுமார் 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 143, 341, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்

மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை