பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை பகுதிகள், பேருந்து நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்களில் வழக்கத்ைத விட கூடுதலாக பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இரவு நேரம் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. டிஜிபியின் உத்தரவை தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர ரோந்து பணி, வாகன சோதனைகளில் ேநற்று மதியம் முதல் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மாவட்ட எல்லைகள், மாநில எல்லைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி ேமற்கொண்டு வருகின்றனர். இதேபோல சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பயணிகளின் உடமைகள் சோதனையிடப்பட்டன. ரயில் பெட்டிகளிலும் மர்ம பொருட்கள் ஏதேனும் உள்ளதா என சோதிக்கப்பட்டது.