பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குழந்தை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது: கனிமொழி பிரசாரம்

கோவை: பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கோவையில் கனிமொழி எம்பி பிரசாரம் செய்தார். கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கோவை கரும்புக்கடை பகுதியில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பாஜ ஆளும் மாநிலங்களில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.

அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. மீண்டும் பாஜ ஆட்சியை பிடித்தால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறிதான். பொய் செய்திகளை பரப்பவே பாஜ குழு வைத்துள்ளது. பொய் செய்திகளை ஒரு குழு மூலம் பரப்பி, மத ரீதியான பிரச்னைகளை பாஜ ஏற்படுத்துகிறது. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜ ஆட்சி. கடும் நிதி நெருக்கடியிலும் திமுக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி

பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை நாளை தள்ளிவைப்பு

உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரிக்கை