கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மக்களுக்காக திமுக அரசு நிறைய செய்துள்ளது. எங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கிறது; 40க்கு 40 வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளானவர்கள் சேர்ந்தால் கறைபடியாதவர்களாக்கும் வாஷிங்மெஷின்தான் பாஜக. அமலாக்கத்துறை, ஐ.டி, சிபிஐ உடன் கூட்டணி அமைத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. மக்களை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுகிறார்கள். தேர்தல் பத்திர முறைகேடு, கணக்கு இல்லாத பி.எம்.கேர் போன்றவற்றில் இருந்து திசைதிருப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன. ஜனநாயகத்தின் அடிப்படையில் “I.N.D.I.A. ” கூட்டணி உருவாக்கப்பட்டது . பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தல் வராது,”இவ்வாறு தெரிவித்தார்.