மேலும், ‘மதி’ என்பது சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் அடையாளமாக மாநில அளவில் உள்ளது. 2023ம் ஆண்டுடன் மகளிர் திட்டம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை நினைவு கூறும் வகையில் சுய உதவிக் குழு தினத்தை கடைபிடிக்க ஆணை வழங்குமாறு அரசிடம் கோரப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்தது. ஆய்வுக்குப்பின், தமிழ்நாட்டில் முதன் முதலாக சுய உதவிக் குழுவைத் தொடங்கி வித்திட்ட தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3ம் நாளினை ஒவ்வோர் ஆண்டும் சுய உதவிக் குழுக்களின் மேம்பாடு குறித்த அறிவிப்புடன் சுயஉதவிக் குழு தினமாக கடைபிடிப்பதற்கு அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.