இவ்விவகாரம் தொடர்பாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது. என்ன இருந்தாலும், அவர்கள் (பாகிஸ்தான்) எங்கள் அண்டை நாடு. வரலாற்றைப் பாருங்கள். இன்றுவரை நாம் உலகில் எந்த நாட்டையும் தாக்கவில்லை அல்லது எந்த நாட்டின் ஒரு அங்குல நிலத்தையும் ஆக்கிரமிக்க முயற்சிக்கவில்லை.
இதுதான் இந்தியாவின் இயல்பு. ஆனால், யாராவது இந்தியாவுக்கு கோபமான கண்களைக் காட்டினால், மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு வந்து பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்க முயன்றால், நாங்கள் அவர்களை விட்டுவிட மாட்டோம். பயங்கரவாதிகள் அண்டை நாட்டிற்கு தப்பிச் சென்றால், பாகிஸ்தானுக்குள் இந்தியா நுழையும்’ என்றார்.