சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் பி.டெக். 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் பி.டெக். 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் கேதார் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் பி.டெக். 2ம் ஆண்டு படிக்கும் கேதார் சுரேஷ் என்ற மாணவர் காவேரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மாணவர் தற்கொலை செய்துகொண்ட விடுதியில் தற்கொலை கடிதமோ அல்லது வீடியோ ஆதாரம் ஏதேனும் உள்ளதா என கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவர் தற்கொலைக்கு பாடம் அழுத்தம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது மற்றொரு மாணவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகளை குதூகலமாக வரவேற்கும் குல்மோஹர் பூக்கள்

மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்

நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் கைது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு