இந்த நிலையில் இந்த கொலை எதற்காக நடத்தப்பட்டது மற்றும் கொலை நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட மகேஷினுடைய செல்போன் குறித்தும் பல பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போது கைப்பற்றப்பட்ட மகேஷின் செல்போனிலிருந்து ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும் அவர்களுடன் மணி கணக்கில் ஆபாசமாக உரையாடல் நடத்தி இருப்பதையும் அதற்கான விவரங்களை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் மகேஷ் ஆபாச இணையதளங்களில் செல்போன் மூலம் ஏராளமான விடீயோக்களை பார்த்திருந்த விவரங்களையும் கண்டுபிடித்தனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் அவர் மனஅழுத்தம் காரணமாக சிவனநாயரிடம் பேசிவந்துள்ளார். அப்போது அவருடைய பார்வை மற்றும் அவரது நடவடிக்கை சரியில்லை என கூறி மனைவி பிரசன்ன குமாரியை கண்டித்துள்ளார். மேலும் அவரை வீட்டிற்கு வரக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிற்கு மனஅழுத்தம் தொடர்பாக மாத்திரைகள் வழங்குமாறு அவரது மனைவியிடம் கேட்ட போது அப்போது எழுந்த வாய்த்தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றிருப்பதும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தனி அறையில் பிரசன்னகுமாரி இருந்ததால் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று அதன் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாமா என்ற கோணத்திலும் ஆவடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.