தமிழ்த்துறைத் தலைவர் விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார். இலக்கியக் கூடல் செயலாளர் மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இலக்கியக் கூடல் தலைவர் ரேகா மணி அறிமுக உரை நிகழ்த்தினார். பட்டிமன்ற பேச்சாளர் தொலைக்காட்சி புகழ் பேராசிரியர் மணிமேகலை சித்தார்த்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘எது அன்பு ?’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி அன்பின் பன்முகத் தன்மையைப் பல்வேறு சான்றுகளுடன் சிறப்பாக எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டும் வண்ணம் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.