கலைஞர் நூற்றாண்டு விழா குழு அமைப்பு: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: கலைஞரின் நூற்றாண்டு விழாக் குழுவை அமைத்து திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திட உரிய ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கிட தலைமைக் கழகத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், முன்னாள் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related posts

ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அனுமதி

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட 2-வது வழக்கில் அவரது ஆதரவாளரை கைது செய்தது மைசூரு போலீஸ்..!!