இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனிதா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாடு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகசாமி, நேற்று முன்தினம் இரவு குருவம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கோபம் தீராத ஆறுமுகசாமி நேற்று அதிகாலை குருவம்மாள் மற்றும் பேர குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் குருவம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இழந்தார்.
தீக்காயம் அடைந்த சிறுவன், சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார். தீ வைத்த ஆறுமுகசாமி தோப்பு அருகிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எமனேஸ்வரன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.