இ தையடுத்து, ஆணையர் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம், முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு விஜயராகவன் மனு அனுப்பினார். இதுகுறித்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் விசாரணை நடத்தி விஜயராகவனுக்கு வட்டியும் வாடகை பணத்தை கொடுக்க உத்தரவிட்டது. ஆனாலும் பணத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று விஜயராகவன், மனைவி ஜெய (26), குழந்தை சாய் வைஷ்ணவி (2) ஆகியோருடன் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது கேனில் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். பின்னர், வாடகை தொகையை விரைவில் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.