அந்த தேர்வில், அவர்கள் இருவரும் தேர்ச்சி பெற்று பல் மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கு முத்துக்கவுண்டனுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் தலைமை ஆசிரியர் தனசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு (எ) திருநாவுக்கரசு கலந்து கொண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் மற்றும் வெற்றி பெற காரணமாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், ஆடிட்டர் ஞானசுந்தரம்,முத்துசாமி, சரவணக்குமார், சிவராசுசதீஷ்குமார் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.