இக்குறியீடு, “குழந்தைப்பருவ புற்றுநோய் ஒழிப்பில்” தொடக்க நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கும் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் மருத்துவர்கள், குழந்தைப்பருவ புற்றுநோயை வென்று வாழ்பவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் அஞ்சல் துறையின் முக்கிய நபர்கள் நடத்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை தலைமை இயக்குநர் ஷீலகேதன், தமிழ்நாடு போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீதேவி, டாக்டர் ரேவதி ராஜ், புற்றுநோயை வென்ற சிறுவன் ஆதர்ஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீதேவி கூறுகையில், இது குழந்தைப்பருவ புற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய யுத்தத்தில் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் கனிவான முன்னேற்ற நடவடிக்கையாகும். உலகெங்கிலும் இந்த முன்னெடுப்பு திட்டம் உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறோம். இந்த சிறிய ஆனால் சக்தி வாய்ந்த குறியீட்டின் ஆற்றலை மேலும் மேம்படுத்தவும், புற்றுநோயை எதிர்த்து போராடும் இளம் வீரர்களின் வாழ்க்கையில் ஆழமான மாற்றத்தை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றார்.