அண்ணா சிலைக்கு சசிகலா மரியாதை அதிமுகவினர் எதிர்ப்பு

சென்னை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, சசிகலா நேற்று திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சசிகலாவின் ஆதரவாளர்கள் இப்பகுதியில் அதிமுக கட்சி கொடி, பேனர்கள் வைத்தனர். அந்த பேனர் மற்றும் கொடிகளை அகற்றக்கோரி அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் மற்றும் பேரூர் செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

வெறுப்பு, மோதல் நீங்கி சகோதரத்துவம், அமைதி நிலவட்டும்: தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல ‘ஒன்றிணைவோம் வாருங்கள்’ அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஆமைகளின் எண்ணிக்கை 2.15 லட்சமாக அதிகரிப்பு: தமிழக வனத்துறை சாதனை