அதன் அடிப்படையில் ஆண்டிபட்டி வருவாய் கிராமத்தில் காமராஜர் நகர் பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள 4,224 சதுர அடியில் உள்ள புஞ்சை நிலம் திருக்கோயில் வசம் நேற்று கையகப்படுத்தப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தை யாரும் சொந்தம் கொண்டாடவோ, ஆக்கிரமிக்கவோ, அபகரிக்கவோ கூடாது மீறினால் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.