இந்த நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது,”பாலஸ்தீனம் உடனான போரை நாங்கள் தொடங்கவில்லை; ஆனால் நாங்கள் போரை முடித்து வைப்போம்
போரை நாங்கள் விரும்பவில்லை; ஆனால் எங்கள் மீது வன்முறையான வழியில் திணிக்கப்பட்டுள்ளது; எங்களை தாக்கியதன் மூலம் ஹமாஸ் படை வரலாற்று தவறை செய்துள்ளது; அதற்கான விலையை பெறுவார்கள்,’என்றார். இதனிடையே ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து 5 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹமாஸ் அமைப்பினரின் நடவடிக்கைகளை உலகமே கண்காணித்து வருகிறது.ஹமாஸின் தாக்குதலில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று 200 பேர் கொல்லப்பட்டுள்ளார்.வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.தனது நாட்டு மக்களை ஹமாஸ் அமைப்பிடம் இருந்து காக்க போராடி வரும் இஸ்ரேலுக்கு துணை நிற்போம,’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.