ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பயிற்சியை முடித்துவிட்டு ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வாகனம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் சிஆர்பிஎஃப் வாகனத்தில் பயணம் செய்த 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதில் 2 பேருக்கு கால் சம்பவ இடத்திலேயே துண்டானது. மேலும் படுகாயமடைந்த 2 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உடல்நிலை மீது உண்மையாகவே அக்கறை இருந்தால் பிரதமர் மோடி எனக்குதான் போன் செய்திருக்க வேண்டும்: நவீன் பட்நாயக்

பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,22,802 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு

பந்தலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை