மேலும் கனமழை காரணமாக அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனால் அந்த வழியாக ஊழியர்களோ, பால் ஏற்றி செல்லும் வாகனமோ செல்ல முடியாத நிலை இருந்தது. எனவே சென்னையில் சில இடங்களில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் தேங்கி இருந்த தண்ணீர் முற்றிலுமாக அகற்றப்பட்டு ஆவின் பால் பண்ணையில் முழுவீச்சில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.