நடிகர் சூரியகிரண் மரணம்

சென்னை: நடிகரும் இயக்குனருமான மாஸ்டர் சுரேஷ் என்கிற சூரியகிரண் (49) மாரடைப்பால் காலமானார். தமிழ், தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக 200 படங்களில் நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். இவர், ‘முந்தானை முடிச்சு’, ‘பூவிழி வாசலிலே’ உள்பட பல படங்களில் நடித்த பேபி சுஜிதாவின் சகோதரர். பாக்யராஜ், சரிதா நடித்த ‘மவுன கீதங்கள்’ உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் சுரேஷ். பிறகு தனது பெயரை சூரியகிரண் என மாற்றிக்கொண்டு தெலுங்கில் படங்களை இயக்கினார். நாகார்ஜுனா தயாரிப்பில் ‘சத்யம்’ என்ற படத்தை முதலில் இயக்கினார். தொடர்ந்து ‘பிரம்மாஸ்திரம்’, ‘ராஜு பாய்’ ஆகிய தெலுங்கு படங்களையும் இயக்கினார். 2010ம் ஆண்டு ‘காசி’, ‘சமுத்திரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை காவேரியை காதல் திருமணம் செய்தார். கருத்து வேறுபாட்டால் இவர்கள் பிரிந்தனர். இப்போது வரலட்சுமி நடிப்பில் ‘அரசி’ என்ற படத்தை இயக்கி வந்தார். இந்நிலையில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட சூரியகிரண், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இறந்தார். சென்னையில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு