அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி பெறவில்லை என விஜயபாஸ்கர் தரப்பு வக்கீல்கள் வாதிட்டு, எழுத்துப்பூர்வமாக மனு தாக்கல் செய்தனர். சட்டப்பேரவைத் தலைவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் ஹேமந்த் தெரிவித்தார். இதையடுத்து அரசுத் தரப்பில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கக் கூறி, வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு நீதிபதி பூரண ஜெய ஆனந்த் ஒத்திவைத்தார்.