இந்த குண்டு வெடிப்பில் 54 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 50 பேர் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடந்து முடிந்த ஒரு சில மணி நேரத்தில்,கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஹங்கு நகரில் தபா காவல்நிலையத்துக்குள் 5 தீவிரவாதிகள் நுழைந்தனர். உடனடியாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். மேலும் 3 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர். ஒரு தீவிரவாதி மசூதி அருகே தன்னிடம் இருந்த குண்டை வெடிக்க செய்தான். இதில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.