199 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

சேந்தமங்கலம், மார்ச் 24: சேந்தமங்கலம் தாலுகாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 199 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.  இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் உரிமை பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில், கொல்லிமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 63 துப்பாக்கிகள் சேந்தமங்கலம் – 40 புதுச்சத்திரம் – 19 பேளூக்குறிச்சியில் – 69 என மொத்தம் 199 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை