பலுசிஸ்தானில் நடந்த தாக்குதலில் 14 பாகிஸ்தான் வீரர்கள் பலி


கராச்சி: பலுசிஸ்தானில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 14 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் சில தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவை பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில் பலுசிஸ்தானில் குவாதார் மாவட்டத்தில் உள்ள பாஸ்னியில் இருந்து ஓர்மாராவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் இரண்டு வாகனங்களில் சென்றனர்.

அந்த வாகனங்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சோப் மாவட்டத்தின் சம்பாஸ் பகுதியில் 6 தீவிரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு பணி ஜரூர்

டிரம்ப் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்த்து வழக்கு

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு