100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம், மார்ச் 29: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை அஞ்சல் அலுவலர் நாகஜோதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், அஞ்சலக பணியாளர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ‘‘அனைவரும் மனசாட்சி படி வாக்களிப்போம்’’ என்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி வாக்களிக்க கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஊழியர்கள் ஜெயராமன், ராமு, கணேஷ், அஞ்சலக ஊழியர் தவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்

காரியாபட்டி அருகே தனியார் சோலார் பிளான்ட்: கிராம மக்கள் எதிர்ப்பு

சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு