நாமகிரிப்பேட்ைட, ஏப்.24: நாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட ஊர்களில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்து குவித்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கொள்முதலுக்காக வந்திருந்தனர். விரலி ரகம் குவிண்டால் ₹17,607 முதல் ₹20,533 வரையிலும், உருண்டை ரகம் ₹15,784 முதல் ₹16,859 வரையிலும், பனங்காளி ரகம் ₹25,203 முதல் ₹29,502 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் 600 மூட்டை மஞ்சள் ₹60 லட்சத்திற்கு விற்பனையானது.