₹1.50 லட்சம் கொள்ளை

சேலம், ஏப். 18: சேலம் பள்ளப்பட்டி பகுதியில் டூவீலர் உதிரிபாக விற்பனை கடை உள்ளது. இங்கு சாமிநாதபுரத்தை சேர்ந்த நடராஜன் (41) என்பவர் மேலாளராக இருக்கிறார். கடந்த 12ம் தேதி கடையை பூட்டி விட்டுச்சென்றார். பின்னர் மறுநாள் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, உரிமையாளரின் அறையில் இருந்த ₹1.50லட்சத்தை மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கடையினுள் புகுந்து திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி அவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை