வையம்பட்டி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் காயம்

மணப்பாறை, மே 25: வையம்பட்டி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.சென்னை தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவர் மற்றும் முனியம்மாள் (38), ஜெனிட்டா(8), மங்கை(40), ராஜன்(35) மற்றும் ராஜாமணி உள்ளிட்ட குடும்பத்தினர் 6 பேருடன் தேனியில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு காரில் நேற்றுமுன்தினம் புறப்பட்டனர். காரை சென்னை பம்பன் பகுதியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் சுரேஷ் ஓட்டி வந்தார். கார் நேற்று காலை மணப்பாறை அடுத்த திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டி ஒன்றியம் கீரனூர் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி சாலையோரம் ஆற்றுஓடை பள்ளத்தில் கால் உருண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஏழு பேரும் சிறு காயங்களுடன் தப்பினர். தகலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலை ரோந்து பணியாளர்கள் மற்றும் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தவிபத்து குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர் 80.8% தேர்ச்சி: 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தல்

ஈஞ்சம்பாக்கத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற ₹3 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், காவலர் கைது

மின்தடையை கண்டித்து சாலை மறியல்